இதனால் வறுமையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற மனித நேயம் வளர்கிறது. பிஞ்சு மனதில் நல்ல எண ணங்கள் பசுமரத்து ஆணி போல் பதிந்து விடுகிறது. பிற்கால இளைய சமுதாயம் இன்னும் சிறப்பாக வளர இதுபோன்று செயல் பாடுகள் அதிகம் உதவி செய்யும் என்பது உண்மை. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம் கூறியதாவது எங்கள் பள்ளியில் நாங்கள் தொடர்ந்து பல வருடங்களாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் உண்டியல்வாங்கி கொடுத்துள்ளோம். அதனில் அவர்களால் முடிந்த காசைசமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை போடுகிறோம் “என்று சேமிக்க சொல்லி வருகிறோம். அடிக்கடி இவ்வாறு நல்ல சொற்களை சொல்லி காசு போடுவதால் சொல்லி காசு போடுவதால் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கம் வருகிறதுபள்ளியில் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலும் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகளாக உண்டியல் சேமிப்பு பணத்தோடு ,பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் சேர்ந்து இது வரை முக்கியமான சமுதாய உதவிகளை செய்து உள்ளோம். குறிப்பாக 2015 ம் ஆண்டு சென்னை வெள்ள நிவாரணத்துக்கு 8,000 ரூபாய் மதிப்பிலான போர்வைகள் வாங்கி அனுப்பியது, நாளிதழின் மூலம் வந்த தகவலின் வழியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சென்னை | பாட்டி இளவரசி பேரனுக்கு மருத்துவ உதவியாக 6,000 ரூபாய் காசோலை அனுப்பியது , செய்த உதவி, கேரளா வெள்ள நிவாரணத்துக்கு 8,000 | ரூபாய் பணம் அனுப்பியது, கஜா புயலுக்கு 11 மூடை | அரிசி அனுப்பி உதவியது என எங்க என எங்களது உதவி தொடர்கிறது என்று கூறினார் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.