Amit Shah-வுக்கு அடுக்கடுக்காக கேள்வி… Citizenship Bill விவாதத்தில் ஜொலித்த தயாநிதி மாறன்

Citizenship Bill debate - சுமார்12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு குடியுரிமை திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் ஒப்புதல் பெற்றது. இந்நிலையில் இன்று மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையான லோக்சபாவில் தமிழக எம்பிக்களில் தயாநிதி மாறன் (Dayanithi Maran), திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மசோதாவுக்கு எதிராக கொந்தளித்துப் பேசினர். இதில் தயாநிதி, அமித்ஷாவுக்குப் (Amit Shah) பல்வேறு கேள்விகளை அடுக்காக முன்வைத்தார். பல இடங்களில் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கினார். தயாநிதியின் பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. 


“திமுக சார்பாக இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம். காரணம், இது முழு மனதோடு வரையறுக்கப்படவில்லை. இது முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. உண்மையில் இந்த மசோதாவில் கிறித்துவர்களையும் இணைத்திருக்க மாட்டீர்கள். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு வரும் என்பதை உணர்ந்து அவர்களை இணைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்,” என்று ஆரம்பித்தார் தயாநிதி.


தொடர்ந்து அமித்ஷாவைப் பார்த்து பேசிய தயாநிதி, “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்கள் மாநிலத்தில் உங்கள் சார்பில் ஒரு மக்கள் பிரதிநிதி கூட இல்லை. சொல்லப் போனால் மொத்த தென்னிந்தியாவிலும் பாஜகவின் தாக்கம் குறைவு. இதை வைத்துப் பார்க்கும்போது, வட இந்தியாவும் தென்னிந்தியாவும் வித்தியாசமாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள். எனவே, நாங்கள் சொல்கிறோம் இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்று. சிறுபான்மையினருக்கு எதிரானது என்று…